எரேமியா 47:1காத்சாவின் அழிவுக்கு முன்
பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
Jeremiah 47:1
காத்சாவின் அழிவுக்கு முன்
எகிப்தின் பார்வோன் காத்சாவைத் தாக்கும் நேரத்தில்தான் கர்த்தர் எரேமியாவுக்கு இந்த வசனத்தைக் கொடுத்தார். பெலிஸ்தர் இஸ்ரயேலின் பழைய பகைவர், தாவீது காலத்திலிருந்தே வந்த மோதல். ஆனாலும் கர்த்தர் தம் ஜனத்தின் பகைவரையும் தண்டியாமல் விடமாட்டார் என்பதைக் காண்கிறோம். வேறு நாட்டாருக்குக் கூறுவதற்கும் கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைத் தெரிந்துகொள்கிறார் என்பதே ஆச்சரியம்.
