எரேமியா 51:60செராயாவுக்கு கற்பித்தது
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.
Jeremiah 51:60
செராயாவுக்கு கற்பித்தது
சிதேக்கியா ராஜா பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடு போன செராயா என்ற பிரபுவை எரேமியா பயன்படுத்தினார். சாந்தகுணமுள்ள பிரபு என்று அழைக்கப்படும் அவரிடம் தான் எழுதிய அத்தனை வசனங்களையும் கொடுத்தார். தேவனுடைய வார்த்தை பரவுவதற்கு ஒரு உண்மையான, சாந்தமான மனுஷனையே தேவன் பயன்படுத்துகிறார். சிறு ஊழியங்களும் தேவனுடைய பெரிய திட்டத்தில் இடம் பெறுகின்றன.
