யோவான் 19:23தையலில்லா அங்கி
போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
John 19:23
தையலில்லா அங்கி
போர்ச்சேவகர் இயேசுவின் வஸ்திரங்களை நாலு பங்காக பங்கிட்டுக்கொண்டார்கள். ஆனால் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்ட, தையலில்லாத அவரின் அங்கியை கிழிக்க அவர்கள் விரும்பவில்லை. அது அரிதான, விலைமதிப்புள்ள ஆடையாக இருந்திருக்கலாம். இயேசு தன் கடைசி நேரத்தில் தன் ஆடைகள் கூட எடுத்துக்கொள்ளப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதை இது காட்டுகிறது.
