யோவான் 19:28தாகமாயிருக்கிறேன்
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
John 19:28
தாகமாயிருக்கிறேன்
இயேசு எல்லாம் முடிந்தது என்று அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக 'தாகமாயிருக்கிறேன்' என்றார். சங்கீதத்தில் முன்னரே எழுதப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள் அவருடைய கடைசி நிமிடங்களில் நிறைவேறின. உடலால் அவரும் மனுஷராகவே இருந்ததால் அந்த வேதனையை உணர்ந்தார். மகிமையின் கர்த்தர் தாகத்தால் வேதனையுற்றது நமக்கு அவர் எத்தனை உண்மையாக மனுஷராகியிருந்தார் என்பதை நினைவுபடுத்துகிறது.
