யோவான் 4:29வந்து பாருங்கள்
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
John 4:29
வந்து பாருங்கள்
தான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் சொன்னார் என்று ஊரார் அனைவரிடமும் சொல்லி, அவரை வந்து பார்க்கும்படி அழைத்தாள். தன் கடந்த காலத்தின் வெட்கக்கேடான உண்மையையும் மறைக்காமல் திறந்து சொல்லும் துணிவு அவளுக்கு வந்தது. இயேசுவைச் சந்தித்த மகிழ்ச்சி அவளுடைய பழைய பயத்தையும் வெட்கத்தையும் மேற்கொண்டது. உண்மையான சந்திப்பு எப்போதும் மற்றவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ள வைக்கும் வெளிப்பாட்டைத் தரும்.
