யோசுவா 2:1இரகசிய வேவுகாரர்
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
Joshua 2:1
இரகசிய வேவுகாரர்
யோசுவா யோர்தானைக் கடக்கும் முன்பே, சித்தீமிலிருந்து இரண்டு மனுஷரை இரகசியமாய் அனுப்பினார். எரிகோ பட்டணம் எப்படிப்பட்டது என்று அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? அவர்கள் போய் தங்கியது ராகாப் என்னும் பெண்ணின் வீட்டில். இந்த வீடு தெருவோரமான வீடு அல்ல, அரண் மதிலில் இருந்த வீடு - தேவன் அவர்களுக்காக ஒரு பாதுகாப்பான இடத்தையே முன்பே ஏற்பாடு செய்திருந்தார். சின்ன ஆரம்பங்களில் தேவன் பெரிய காரியங்களை நடத்துவார்.
