நியாயாதிபதிகள் 18:20மனது இதமியப்பட்டது
அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.
Judges 18:20
மனது இதமியப்பட்டது
அந்த ஆசாரியன் அதற்கு உடன்பட்டு, விக்கிரகங்களையும் ஏபோத்தையும் எடுத்துக்கொண்டு ஜனங்களுக்குள் சென்றான். மனது இதமியப்பட்டது என்று வேதம் சொல்கிறது - அதாவது அவனுக்கு இது நல்ல வாய்ப்பாகவே தோன்றியது. நன்மை தீமை என்ற பாகுபாடு அற்று, தன் நலனுக்கு எது நல்லது என்று மட்டுமே அவன் யோசித்தான். சொந்த லாபத்தால் மனது கவரப்படும்போது, நேர்மையான தீர்மானம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை இது காட்டுகிறது.
