நியாயாதிபதிகள் 20:1தேசமெல்லாம் ஒன்று கூடுதல்
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
Judges 20:1
தேசமெல்லாம் ஒன்று கூடுதல்
தாண் முதல் பெயெர்செபா வரைக்கும், அதாவது நாடு முழுவதிலும் இருந்து ஜனங்கள் மிஸ்பாவுக்கு வந்து கூடினார்கள். ஏன் தெரியுமா? கிபியாவில் நடந்த கொடிய அநியாயம் எல்லா கோத்திரங்களையும் ஒன்றுசேர்த்தது. வழக்கமாக பிரிந்திருந்த இஸ்ரவேல் இப்போது ஒரே மனசாக, ஒரே சபையாக கர்த்தர் முன்பாக கூடி நின்றது. அநியாயத்தை பார்த்து மவனமா இருக்காம, ஒன்றுகூடி நியாயம் விசாரிக்கிற மனசு அவர்களுக்கு வந்தது.
