நியாயாதிபதிகள் 9:19நேர்மையானதென்றால்...
நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவர்களுக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.
Judges 9:19
நேர்மையானதென்றால்...
நீங்கள் செய்தது உண்மையும் உத்தமமும் என்றால், அபிமெலேக்கின்மேல் சந்தோஷமாக இருங்கள் என்று யோதாம் நிபந்தனையுடன் கூறினார். ஆனால் அந்த 'என்றால்' என்ற வார்த்தையே அவர்கள் செய்தது நேர்மையானதல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. உள்ளத்தில் அறிந்த உண்மையை நாம் மறைத்து மகிழ்ச்சிகொள்ள முயலும் நேரங்கள் நமக்கும் உண்டு.
