லேவியராகமம் 10:1அந்நிய அக்கினி
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
Leviticus 10:1
அந்நிய அக்கினி
ஆரோனின் இரு மகன்களான நாதாபும் அபியூவும் ஆசாரிய பணியில் புதியவர்கள். கர்த்தர் பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட புனித அக்கினியையே தூபத்திற்குப் பயன்படுத்த சொல்லியிருந்தார். ஆனால் இவர்களோ தங்கள் இஷ்டப்படி வேறு அக்கினியை எடுத்து வந்தார்கள். பரிசுத்த ஸ்தலத்தில் தன் விருப்பப்படி நடக்கக் கூடாது என்பதை இவர்கள் அலட்சியம் செய்தார்கள்.
