லேவியராகமம் 10:15ஏறெடுத்துப் படைத்தல்
கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
Leviticus 10:15
ஏறெடுத்துப் படைத்தல்
கொழுப்பாகிய தகனபலிகளோடு கொண்டுவரப்படும் தொடையையும் மார்க்கண்டத்தையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக படைக்க வேண்டும். இது நித்திய கட்டளையாக ஆரோனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பலியிலும் கர்த்தர் தமது ஊழியர்களை நினைத்து அவர்களுக்கும் ஏதோ ஒரு பங்கு வழங்குகிறார்.
