லேவியராகமம் 6:4திருப்பிக் கொடு
அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
Leviticus 6:4
திருப்பிக் கொடு
குற்றவாளியானவன் முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா? பலி கொண்டுவருவதற்கு முன், தான் தவறாக எடுத்துக்கொண்ட பொருளை மீண்டும் திரும்பக் கொடுக்கவேண்டும். பலாத்காரமாய் பறித்ததும், இடுக்கண் செய்து பெற்றதும், ஒப்படைக்கப்பட்டு மறுதலித்ததும் எல்லாமே திருத்தப்படவேண்டும். மனந்திரும்புதல் என்பது வெறும் வார்த்தையில் நிற்காமல், செயலிலும் தெரியவேண்டும் என்பதை இங்கே காண்கிறோம்.
