லூக்கா 12:1புளித்த மாவின் எச்சரிக்கை
அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரை ஒருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
Luke 12:1
புளித்த மாவின் எச்சரிக்கை
ஆயிரக்கணக்கான ஜனங்கள் நெருக்கிக்கொண்டு வந்திருந்தார்கள், ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்கு கூட்டம். அந்த நேரத்திலும் இயேசு முதலில் தம் சீஷர்களைப் பார்த்து பரிசேயருடைய மாயத்தைக் குறித்து எச்சரித்தார். வெளியே பக்தியாகக் காட்டி உள்ளே வேறு வாழ்வது ஒரு புளித்த மாவு போல மொத்த வாழ்க்கையையும் கெடுத்துவிடும். கூட்டம் பெருகும்போதும் இயேசுவின் கண் தம் சீஷர்களின் இருதயத்தின்மேலேயே இருந்தது.
