லூக்கா 2:20துதித்துக்கொண்டு திரும்பினர்
மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
Luke 2:20
துதித்துக்கொண்டு திரும்பினர்
மேய்ப்பர்கள் தங்கள் மந்தைக்கு திரும்பிச் சென்றனர் - ஆனால் அவர்கள் முன்பு போலிருக்கவில்லை. கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு போனார்கள். ஒரு அற்புத சந்திப்பு அவர்கள் இருதயத்தை என்றும் மாற்றியது. நமக்கும் தேவனுடன் சந்திப்பு உண்டானால், அது நம்மையும் என்றும் மாற்றும்.
