லூக்கா 4:42தனிமையில் ஒரு நேரம்
உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத்தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
Luke 4:42
தனிமையில் ஒரு நேரம்
இரவு முழுவதும் பேய் பிடித்தவர்களை சுகமாக்கி, நோயாளிகளை குணப்படுத்தி களைத்திருந்த நேரத்தில், இயேசு அதிகாலையில் எழுந்து ஒரு வனாந்தர இடத்திற்குச் சென்றார். தன் பிதாவோடு தனித்திருக்க வேண்டிய தேவை அவருக்கு எப்போதும் இருந்தது. ஜனங்களோ அவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை விட்டுப் போகவே கூடாது என்று பிடித்துக் கொண்டார்கள். அவருடைய அன்பும் வல்லமையும் அனுபவித்தவர்கள் அவரை விட்டுப் பிரிய மனது வராமல் இருந்தது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
