லூக்கா 4:9தேவாலய உப்பரிகையில்
அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
Luke 4:9
தேவாலய உப்பரிகையில்
மூன்றாம் முறை பிசாசு இயேசுவை எருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு கொண்டுபோனான். இப்போது இடம் மாறினாலும் தந்திரம் அதே - ‘தேவனுடைய குமாரனேயானால்’ என்ற சந்தேக வித்தையை மீண்டும் பயன்படுத்தினான். தாழக்குதி என்று சொல்வது, மக்கள் முன் ஒரு அற்புத அடையாளத்தால் தன்னைத் தானே நிரூபிக்கும்படி தூண்டுவதே. மகிமையை பெறும் வழி எப்போதும் தேவனுடையது, நம் சொந்த ஆசையல்ல.
