லூக்கா 5:29பாவிகளுடன் பந்தி
அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
Luke 5:29
பாவிகளுடன் பந்தி
லேவி தன் வீட்டிலே இயேசுவுக்குப் பெரிய விருந்து செய்தார், அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியிருந்தனர். புதிதாக மனந்திரும்பியவர் தன் பழைய நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வர விரும்பியது எத்தனை அழகான குணம். மகிழ்ச்சியான தன் புது வாழ்க்கையை, பழைய நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள அவர் விரும்பினார். மாற்றம் பெற்றவர்கள் அதைத் தனக்குள் மட்டும் வைத்திருக்க வேண்டாம்.
