லூக்கா 8:1ஊர் ஊராகச் சென்றார்
பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள் தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
Luke 8:1
ஊர் ஊராகச் சென்றார்
இயேசு ஒரு இடத்திலே தங்கிவிடவில்லை. பட்டணங்கள் தோறும் கிராமங்கள் தோறும் நடந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைச் சொல்லிக்கொண்டே போனார். பன்னிரண்டு சீஷர்களும் அவருடன் இருந்தார்கள், அவர் போன இடமெல்லாம் கூடவே சென்றார்கள். இப்படி பாதையிலேயே கழிந்த வாழ்க்கை, எத்தனை பேருக்கு நற்செய்தி எட்டியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
