மாற்கு 12:1திராட்சத் தோட்டம்
பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
Mark 12:1
திராட்சத் தோட்டம்
இயேசு இந்த உவமையைச் சொன்னது ஆலயத் தலைவர்களை நோக்கியே. திராட்சத்தோட்டம் இஸ்ரவேலைக் குறிக்கிறது, தேவனே அதை நாட்டி, வேலியடைத்து, எல்லாம் ஏற்பாடு செய்து, தோட்டக்காரரிடம் ஒப்படைத்தார். தோட்டக்காரர் என்பவர்கள் அந்நாட்டுத் தலைவர்கள். எஜமான் தூரதேசம் போனது, தேவன் தம் ஜனங்களுக்குச் சுயாதீனம் கொடுத்திருப்பதைக் காட்டுகிறது. நம் வாழ்விலும் தேவன் நம்மிடம் பொறுப்பாக விட்டிருப்பதை நாம் நல்லபடி காக்க வேண்டும் அல்லவா.
