மாற்கு 2:4கூரை பிரிக்கப்பட்டது
ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
Mark 2:4
கூரை பிரிக்கப்பட்டது
ஜனநெருக்கத்தால் உள்ளே செல்ல வழியில்லாதபோது, அந்த நான்குபேர் விட்டுக்கொடுக்கவில்லை. மேற்கூரை மீது ஏறி, அதைப் பிரித்து, படுக்கையோடு அவனை இறக்கினார்கள். வேறொருவர் வீட்டு மேற்கூரையை உடைப்பது சாதாரண காரியம் அல்ல, ஆனாலும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவர்கள் விசுவாசம் தடையை பொருட்டாக்கவில்லை, அது வழியைத் தேடியது.
