மாற்கு 3:1சூம்பின கை
மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
Mark 3:1
சூம்பின கை
ஜெபஆலயத்திற்குள் இயேசு மறுபடியும் நுழைந்தார். அங்கே ஒரு மனுஷன் இருந்தான், அவனுடைய கை சூம்பிப்போய், வலு இல்லாமல் தொங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு வேலை செய்யவும் முடியாது, சாதாரணமாக வாழவும் முடியாது. இயேசு அவனை பார்க்கும் இடத்திற்கே வந்திருக்கிறார் என்பது எத்தனை அருமை. கடவுள் நம் பலவீனத்தை தேடிவருகிறார்.
