மத்தேயு 11:22நியாயத்தீர்ப்பு நாள்
நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 11:22
நியாயத்தீர்ப்பு நாள்
தீருவும் சீதோனும் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மத்தியில் தீய நகரங்களாக அறியப்பட்டவை. அப்படியிருந்தும் நியாயத்தீர்ப்பு நாளில் அவற்றுக்கு நேரிடுவது கொராசினுக்கு நேரிடுவதைக் காட்டிலும் இலகுவாக இருக்கும் என்று இயேசு சொன்னார். அறிவும் வெளிச்சமும் அதிகம் பெற்றவர்களுக்கு பொறுப்பும் அதிகம் என்பது இதன் அர்த்தம். இந்த கடினமான வார்த்தைகள் தேவனின் நீதியின் தத்துவத்தைக் காட்டவே பேசப்பட்டவை, யாரையும் வெறுத்து பேசுவதற்காக அல்ல.
