மத்தேயு 18:10தேவதூதர் பார்வை
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 18:10
தேவதூதர் பார்வை
சிறியவர்களை அற்பமாக எண்ணாதபடி இயேசு எச்சரிக்கிறார். அவர்கள் சாதாரணமானவர் என்று உலகம் நினைத்தாலும், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரமபிதாவின் முகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதைவிட உயர்ந்த மதிப்பு எப்படி இருக்க முடியும். எளியவர் ஒருவனை நீங்கள் அற்பமாக மதிக்கும்போது, பரலோகத்தில் அவனுக்கு அத்தனை மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மனசில் வையுங்கள்.
