மத்தேயு 20:7ஒருவனும் அமர்த்தவில்லை
அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
Matthew 20:7
ஒருவனும் அமர்த்தவில்லை
‘ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை’ என்று அவர்கள் சொல்கிறார்கள். இது வெறுமையான, பயனற்ற நாளாக இருந்திருக்கும் அவர்களுக்கு. ஆனாலும் எஜமான் அவர்களையும் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார். கடைசி நேரத்திலும் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் இந்த தயாள மனசு நம் இதயத்தைத் தொடும்.
