மத்தேயு 27:10நிறைவேறின வார்த்தை
கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
Matthew 27:10
நிறைவேறின வார்த்தை
குயவனுடைய நிலத்திற்காக அந்த பணத்தை கொடுத்த சம்பவம், தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையை துல்லியமாக நிறைவேற்றியது. மத்தேயு தன் நூல் முழுவதிலும் இயேசு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறார் என்பதை காட்ட முயற்சிக்கிறார். சிறு விபரங்கள் வரையிலும் தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதைப் பார்க்கும்போது, நமது இருதயத்தில் நம்பிக்கை பலப்படுகிறது.
