மத்தேயு 4:3கல்லும் அப்பமும்
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
Matthew 4:3
கல்லும் அப்பமும்
பசியின் உச்ச நேரத்தில் சாத்தான் வந்து, ‘நீர் தேவனுடைய குமாரனேயானால்’ என்ற வார்த்தையால் இயேசுவின் அடையாளத்தையே கேள்விக்குள் தள்ள முயன்றான். கல்லை அப்பமாக்கும்படி சொன்னது வெறும் அற்புதம் அல்ல, தேவனை சந்தேகித்து, தன் சொந்த வழியில் தேவையைத் தீர்க்கும்படி தூண்டும் சோதனை. பசி என்பது தவறல்ல, ஆனால் அதைத் தீர்க்கும் வழியில் தேவனுடைய திட்டத்தை மீறுவதே பாபம். நம் தேவைகளும் சரியான வழியில் நிறைவேற வேண்டும் என்பதை இது எடுத்துச் சொல்கிறது.
