மத்தேயு 5:41இரண்டு மைல் நடப்போம்
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
Matthew 5:41
இரண்டு மைல் நடப்போம்
ரோம சிப்பாய் ஒரு யூதனை பலவந்தமாக ஒரு மைல் சுமை சுமக்க வைக்கலாம் என்பது அன்றைய சட்டம். அது அவமானமும் கோபமும் தரும் காரியம். ஆனால் இயேசு சொல்கிறார், அந்த ஒரு மைலோடு நின்றுவிடாதே, இரண்டாவது மைலும் மனசார நடந்துபோ என்று. கட்டாயப்படுத்தப்பட்ட காரியத்தை கூட அன்பின் செயலாக மாற்றும் சக்தி நம்மிடம் இருக்கிறது. பகைமையை நல்மனதால் வெல்லுவதே இயேசுவின் வழி.
