நெகேமியா 11:17ஸ்தோத்திரப் பாட்டு
ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.
Nehemiah 11:17
ஸ்தோத்திரப் பாட்டு
மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் தொடங்கும் தலைவனா இருந்தார், பக்பூக்கியா இரண்டாவதாகவும், அப்தா மூன்றாவதாகவும் இருந்தார்கள். ஆராதனையில் ஸ்தோத்திரப் பாட்டு எவ்வளவு முக்கியம் என்பதால், அதற்கென்று ஒரு தலைவனே நியமிக்கப்பட்டிருந்தார். மனிதர் தேவனுக்கு பாட ஆரம்பிக்க ஒருவர் தொடங்கி வைக்க வேண்டும் என்பது எத்தனை அழகான ஏற்பாடு.
