நெகேமியா 13:7தெரிந்த உண்மை
எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால் செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.
Nehemiah 13:7
தெரிந்த உண்மை
நெகேமியா எருசலேமுக்குத் திரும்பி வந்தபோதுதான் எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்திலேயே ஒரு அறையை ஆயத்தம் செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டார். வெளியே சென்று திரும்பி வந்தவுடன் முதலில் அவருடைய கண் விழுந்தது ஆலயத்தின் நிலைமையின் மேல்தான். தேவனுடைய வீட்டைப் பற்றிய அக்கறை அவருக்கு எப்போதும் முதன்மையாக இருந்தது. அன்பு உள்ளவர் தன் கண்முன் பிரியமான இடத்தில் ஏதேனும் தவறு நடந்தால் உடனே கண்டுகொள்வார்.
