நெகேமியா 6:1திறப்பில்லாத அலங்கம்
நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,
Nehemiah 6:1
திறப்பில்லாத அலங்கம்
அலங்கம் கட்டிமுடிந்தது, இன்னும் கதவுகள் மட்டும் போடப்படவில்லை. இதைக் கேட்டவுடனே சன்பல்லாத்தும் தொபியாவும் கேஷேமும் என்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள். வேலை முடிந்துவிட்டதைப் பார்க்கும்போதே பகைவர்களுக்கு பொறுமை போய்விடுகிறது. அவர்கள் இதுவரை வேலையை நிறுத்த முயன்றார்கள், இப்போது வேறு வழி தேட ஆரம்பிக்கிறார்கள். நல்ல காரியம் முடிவை நெருங்கும்போதே எதிர்ப்பு அதிகமாகும் என்பதை இந்த வசனம் நமக்குக் காட்டுகிறது.
