நெகேமியா 8:1தண்ணீர் வாசலின் கூட்டம்
ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
Nehemiah 8:1
தண்ணீர் வாசலின் கூட்டம்
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த மக்கள், அது ஒரு பண்டிகை நாளும் அல்ல, ஆனாலும் தானாகவே ஒருமனப்பட்டு கூடி வந்தார்கள். வேறு எதற்கும் அல்ல, மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கேட்கவே. வீடுகளையும் வேலைகளையும் விட்டு, தேவனுடைய வார்த்தையை அறியவேண்டும் என்ற தாகத்துடன் வந்து நின்றார்கள். எஸ்றாவை அழைத்ததும் மக்களே, அவர் அல்ல என்பது சொல்லும் இடத்தில் கவனிக்க வேண்டும் - இது மக்களின் சொந்த வேட்கை. இப்படி வார்த்தையை தாகத்துடன் தேடும் மனதை நாமும் நமக்குள் வளர்த்துக்கொள்ளலாம்.
