எண்ணாகமம் 14:24வேறே ஆவியை உடையவன்
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
Numbers 14:24
வேறே ஆவியை உடையவன்
காலேப் மற்றவரைப் போலல்லாமல் ‘வேறே ஆவியை உடையவன்' என்று கர்த்தரே சான்று கொடுக்கிறார். உத்தமமாய் கர்த்தரைப் பின்பற்றியதால், அவர் தானே கண்ட தேசத்திற்குள் அவருடைய சந்ததியார் நுழையும் என்று ஆசீர்வாதம் தரப்பட்டது. ஒரு மனித இருதயத்தின் தன்மையே அவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நம்முடைய இருதயத்தின் தன்மை எப்படியிருக்கிறது என்பதை கர்த்தர் இன்றும் பார்க்கிறார்.
