எண்ணாகமம் 9:7விலக்கப்படக்கூடாது
நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
Numbers 9:7
விலக்கப்படக்கூடாது
தீட்டுப்பட்டவர்களின் வேதனை இதில் தெரிகிறது. கர்த்தருக்குக் காணிக்கை செலுத்த வேண்டிய நேரத்தில் தங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை அவர்களுக்கு இருந்தது. கர்த்தருடைய ஆராதனையில் பங்கு எடுக்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்கள் இதயத்தில் இருந்தது. ஆராதனையை விட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்ற இந்த ஏக்கம் இன்றும் நமக்கும் இருக்க வேண்டியது.
