நீதிமொழிகள் 11:13இரகசியம் காக்கும் நண்பன்
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Proverbs 11:13
இரகசியம் காக்கும் நண்பன்
புறங்கூறித் திரிகிறவன் ஒருவரிடம் சொன்ன இரகசியத்தை எல்லோரிடமும் பரப்பி விடுவான் - அது நம்பிக்கைக்கு துரோகம். ஆவியில் உண்மையுள்ளவனோ தான் அறிந்த காரியத்தை மனசில் புதைத்து வைத்திருப்பான். நண்பர் யார் என்று அறிய இது ஒரு நல்ல அளவுகோல் - இரகசியத்தை காப்பவனே உண்மையான நண்பன். நம்பி ஒப்படைத்ததை பத்திரமாக காப்பதே அன்பின் அடையாளம்.
