நீதிமொழிகள் 16:19தாழ்மை நலம்
அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
Proverbs 16:19
தாழ்மை நலம்
அகங்காரிகளோடு கூடி கொள்ளைப் பொருளை பங்கிட்டு பெருமையாக இருப்பதை விட, சிறுமையானவர்களோடு தாழ்மையாக இருப்பதே நலம் என்று சாலொமோன் சொல்கிறார். செல்வத்தையும் பெருமையையும் தேர்ந்து கொள்வதற்கு பதிலாக, தாழ்மையான நண்பர்களையும் நேர்மையையும் தேர்ந்து கொள்ளுங்கள். இது உலகின் மதிப்பீட்டையும் கர்த்தரின் மதிப்பீட்டையும் நேரெதிராக வைக்கும் வார்த்தை. மனித மதிப்பீட்டை விட கர்த்தருடையதே உண்மையானது.
