நீதிமொழிகள் 19:3தன் தவறை பிறர்மேல்
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
Proverbs 19:3
தன் தவறை பிறர்மேல்
ஒரு மனிதன் தன் மதியீனத்தால் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு, பின் கர்த்தர்மேல் குற்றம் சாட்டுவதைத்தான் சாலொமோன் இங்கே சுட்டிக்காட்டுகிறார். தன் கையால் தன் வழியைத் தாறுமாறாக்கிவிட்டு, ‘கர்த்தர் ஏன் இப்படிச் செய்தார்’ என்று மனம் கலங்குகிறான். இது எப்போதும் மனித இயல்பு - தன் தவறை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மேலிருப்பவர்மேல் சுமத்துவது. நம் வாழ்க்கையில் ஏதேனும் தவறு நடந்தால், முதலில் நம் வழியைப் பரிசோதிப்பதே ஞானம்.
