நீதிமொழிகள் 23:5பறக்கும் பணம்
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.
Proverbs 23:5
பறக்கும் பணம்
கழுகு சிறகடித்து பறந்துவிடுவது போல செல்வம் திடீரென மறைந்துவிடும் என்று ஞானி படம் பிடித்துக் காட்டுகிறார். எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் பணம் நிலைக்காது என்பதை நமது கண்கள் அதன் மேல் அதிகமாய்ச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, நிலையானதை நம்பி வாழ்வதே ஞானம். இன்று இருப்பது நாளை இருக்குமா என்று யோசித்தால் நம் மனதின் பிடிப்பு தளரும்.
