நீதிமொழிகள் 24:32கண்டு புத்தியடைந்தேன்
அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
Proverbs 24:32
கண்டு புத்தியடைந்தேன்
இந்த பாழான தோட்டத்தைக் கண்டு சாலொமோன் சும்மா கடந்துபோகவில்லை, அவர் சிந்தனை செய்து அதிலிருந்து புத்தியடைந்தார். ஞானமுள்ளவன் தன் கண்முன்னே நடக்கும் ஒவ்வொரு காட்சியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்கிறான். ஒரு பாழான வயலைப் பார்த்தும் வெறும் பரிதாபப்படாமல் அதன் காரணத்தை ஆராய்ந்தார். இந்த கவனிப்புத் திறனே அவரை ஞானியாக ஆக்கியது.
