நீதிமொழிகள் 25:26கலங்கின கிணறு
துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
Proverbs 25:26
கலங்கின கிணறு
தண்ணீர் தேடி வரும் ஒருவனுக்கு கிணறு கலங்கி இருந்தால், சுனை கெட்டுப்போயிருந்தால் எவ்வளவு ஏமாற்றம் - துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடி விழுவதும் அப்படித்தான். நேர்மையானவன் தன் நேர்மையை விட்டு தள்ளாடும்போது, அவனை நம்பி நோக்கிக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு அது எவ்வளவு பெரிய கசப்பான அனுபவம். ஒரு நல்ல மனுஷனுடைய தள்ளாட்டம் தன்னைச் சேதப்படுத்துவது மட்டுமல்ல, நம்பியிருந்த அனைவரையும் சேதப்படுத்திவிடும். நேர்மையாக நிலைத்திருப்பது நம்முடையது மட்டுமல்ல, நம்மை நோக்கியிருக்கும் மற்றவர்களுடையதும் ஆசீர்வாதம்.
