நீதிமொழிகள் 26:1பொருந்தாத மகிமை
உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
Proverbs 26:1
பொருந்தாத மகிமை
கார்த்திகை மாதத்தில் பனி விழுவதும், அறுவடைக் காலத்தில் மழை பெய்வதும் விவசாயிக்கு ஆபத்தை உண்டுபண்ணும், அவை அந்த காலத்திற்கு தகுந்தவை அல்ல. அதேபோல மூடனுக்குக் கனமும் மகிமையும் கொடுப்பது பொருத்தமற்றது என்று சாலொமோன் சொல்கிறார். மகிமை என்பது ஞானமும் நல்நடத்தையும் உள்ளவருக்குத்தான் ஏற்றது. வெளியே அழகான வார்த்தை பேசுகிறவனுக்கு பதவி கொடுத்தால் அது எல்லோருக்கும் தொல்லையாகி விடும்.
