நீதிமொழிகள் 31:29எல்லாருக்கும் மேற்பட்டவள்
அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
Proverbs 31:29
எல்லாருக்கும் மேற்பட்டவள்
அநேக ஸ்திரீகள் குணசாலிகளாய் இருந்திருக்கிறார்கள் என்று கணவன் ஒப்புக்கொள்கிறான், ஆனாலும் தன் மனைவி அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழ்கிறான். இது ஒரு கணவனுடைய அன்பான, மனந்திறந்த பாராட்டு. இப்படியான வார்த்தைகள் ஒரு மனைவியின் இருதயத்தை எத்தனை நிறைவாக்கும். வீட்டில் ஒருவரையொருவர் பாராட்டும் வார்த்தைகளே அன்பை புதுப்பிக்கும்.
