சங்கீதம் 116:2செவி சாய்த்தவர்
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
Psalms 116:2
செவி சாய்த்தவர்
தேவன் தமது செவியை நமக்குச் சாய்த்தார் என்பது எவ்வளவு பெரிய அன்பு! ஒரு பெரிய அரசன் தன் காதை சிறியவனின் வார்த்தைக்கு சாய்க்கிறான் என்று நினைத்துப் பாருங்கள். இதனால்தான் இவன் உயிரோடிருக்கும் நாட்கள் எல்லாம் அவரைத் தொழுதுகொள்ள தீர்மானிக்கிறான். கேட்கப்பட்டவன் என்றைக்கும் மூடிய வாயோடு இருக்க முடியாது.
