சங்கீதம் 136:9இரவின் தீபங்கள்
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
Psalms 136:9
இரவின் தீபங்கள்
இருட்டில் தனித்திருக்கும் பயணிக்கு சந்திரனும் நட்சத்திரங்களும் ஒரு வழிகாட்டியாக இருந்தன. அவை வெறும் அலங்காரம் அல்ல, இரவை ஆளும் பொருப்புடன் படைக்கப்பட்டவை. தேவன் இரவையும் மறக்கவில்லை, பகலைப் போலவே இரவுக்கும் ஒரு ஒழுங்கைக் கொடுத்தார். அவருடைய கிருபை பகலோடு நின்றுவிடவில்லை, இரவிலும் தொடர்கிறது.
