சங்கீதம் 16:8வலது பாரிசத்தில் நிலைத்து
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Psalms 16:8
வலது பாரிசத்தில் நிலைத்து
போரிலோ, ஆபத்திலோ, ஒருவனுக்கு வலது புறம் நின்று உதவுபவனே நெருங்கிய பாதுகாவலன். தாவீது கர்த்தரை அப்படிப்பட்ட உணர்வோடு எப்போதும் தன் முன்பாக வைத்திருக்கிறார். அதனால்தான் அசைக்கப்படாத நிலைப்பு தனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். அப்போஸ்தலர் 2:25 இல் பேதுரு இந்த வசனத்தையே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு எடுத்துக்காட்டுகிறார். எப்போதும் தேவனை நம் கண் முன் வைத்திருந்தால் நாமும் அசைக்கப்படமாட்டோம்.
