சங்கீதம் 37:35தழைத்த மரம் மறைந்தது
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
Psalms 37:35
தழைத்த மரம் மறைந்தது
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனை பச்சைமரம் போல தழைத்திருந்ததைத் தாவீது கண்டதாகச் சொல்கிறார். வலிமையும் செழிப்பும் நமக்குக் காணப்படும் தருணத்தில் அது நிரந்தரமாகத் தோன்றும். ஆனால் இது கடந்த காலத்தில் அவர் கண்ட ஒரு நிகழ்வு, தொடர் வசனத்தில் அதன் முடிவைச் சொல்கிறார். வெளித்தோற்றம் ஒருபோதும் முழு உண்மையல்ல.
