சங்கீதம் 44:1பூர்வநாட்களின் கதைகள்
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
Psalms 44:1
பூர்வநாட்களின் கதைகள்
இந்தச் சங்கீதத்தை பாடுகிறவர்கள் இப்போது தோல்வியில் இருக்கிறார்கள். ஆனாலும் முதலில் அவர்கள் பிதாக்கள் சொன்ன பழைய கதைகளை நினைத்துப் பார்க்கிறார்கள். தங்கள் தாத்தா பாட்டிகள் சொன்ன அற்புதங்களை, கண்ணால் காணாமல் காதால் கேட்டு வளர்ந்த சரித்திரத்தை நினைவு கூர்கிறார்கள். வேதனையின் நேரத்தில் கடந்த காலத்தின் தேவனுடைய செயல்களை நினைப்பது ஒரு பெலனாக இருக்கிறது.
