சங்கீதம் 61:5பொருத்தனை கேட்ட தேவன்
தேவனே நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
Psalms 61:5
பொருத்தனை கேட்ட தேவன்
தாவீது முன்பு ஏதோ ஒரு நேரத்தில் தேவனுக்குப் பொருத்தனை செய்திருந்தார் போலும், அதைத் தேவன் கேட்டதை இங்கே நினைவுகூர்கிறார். தேவனுடைய நாமத்திற்குப் பயப்படுகிறவர்களுக்கே சுதந்தரம் என்பது, தேவனை மதிக்கும் இதயத்திற்கு வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதம். வெறும் வார்த்தையான ஜெபமல்ல, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெபம் என்ற நிச்சயம் இதில் இருக்கிறது. இது நமக்கும் தைரியம் தருகிறது.
