சங்கீதம் 73:20விழிக்கும்போது சொப்பனம்
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
Psalms 73:20
விழிக்கும்போது சொப்பனம்
தூக்கத்தில் கண்ட கனவு, விழித்தவுடன் மறைந்துவிடுவது போல, இந்த தீயவரின் வெற்றியும் தேவன் செயல்படும்போது மறைந்துவிடும் என்று ஆசாப் உவமையாகச் சொல்கிறார். எவ்வளவு உண்மையாகவும் நிலையானதாகவும் அது தோன்றினாலும், அது வெறும் தோற்றமே. இந்த உவமை ஆசாபின் மனதுக்கு பெரும் தெளிவைக் கொடுத்தது. தேவனுடைய பார்வையில், அவர்களுடைய பெருமை ஒரு கனவைப் போல் எளிதில் கலைந்துவிடும்.
