வெளிப்படுத்தல் 11:10கொண்டாட்டமும் வேதனையும்
அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
Revelation 11:10
கொண்டாட்டமும் வேதனையும்
இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியில் குடியிருந்தவர்களை வேதனைப்படுத்தியதால், அவர்கள் மரித்ததில் பூமியில் குடியிருப்பவர்கள் சந்தோஷப்பட்டு ஒருவருக்கொருவர் வெகுமதிகள் அனுப்பினார்கள். தேவனுடைய சத்தியத்தின் வார்த்தை மனசாட்சியைக் குத்திக் காயப்படுத்துகிறது, அதனால் அது நீக்கப்பட்டதில் உலகம் மகிழ்ச்சி காணுகிறது. இது எவ்வளவு துயரமான காட்சி என்றால், தேவனுடைய தூதுவர்கள் மரணத்திலும் இகழப்படுகிறார்கள். ஆனாலும் இந்த சந்தோஷம் நீடிக்காது என்பதை அடுத்த வசனம் காட்டுகிறது.
