ரோமர் 16:4கழுத்தைக் கொடுத்தவர்கள்
அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
Romans 16:4
கழுத்தைக் கொடுத்தவர்கள்
பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் பவுலுடைய உயிருக்காக தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள் என்று சொல்கிறார். எப்போது, எங்கே இது நடந்தது என்பது விவரமாக சொல்லப்படாவிட்டாலும், அது ஒரு பெரிய ஆபத்து என்பது வெளிப்படை. அதனால் அவர்களை பவுல் மட்டுமல்ல, புறஜாதிச் சபைகள் அனைத்தும் நன்றியுடன் நினைத்தன. உண்மையான நண்பர்கள் ஆபத்தில் தான் தெரிவார்கள்.
